வியாழன், 16 ஜூன், 2016

வல்லமைபுகைப்படப்போட்டி===67

தோள்மீது
தோழனாக
குரங்கு
 குரங்கின் உழைப்பே
குரங்காட்டியின் பிழைப்பு
குரங்கை விட்டால்
அவனுக்குபிழைப்பில்லை
அவனை விட்டால்
குரங்கிற்கிற்கும் கதியில்லை
அடிக்குப்பயந்தும்
ஆகாரத்திற்காகவும்
அவன்
ஆணைப்படி ஆடும்
அந்தரத்திலும் தொங்கும்
வித்தைகாட்டியின் விரலசைவுக்கு
இன்றைய பெற்றோர்களுமே
வித்தை காட்டிகள்தான்
பிள்ளைகளை
அதைப்படி இதைப்படி
டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு
கோலில்லாமல்
ஆட்டி வைக்கின்றனர்
குரங்கு எப்படி குரங்காட்டியின்
சொல்லுக்கு உடன் படுகிறதோ
அதேபோல் பிள்ளைகளும்
பெற்றோரின் செயலாக
வெளிப்படுமேயன்றி
தானாக எதுவும் செய்வதில்லை
என்பதே தெளிவு
சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்
மக்களையும் குரங்காட்டியாகத்தான்
காட்டுகின்றன இன்றைய
அரசியலுக்கும் இது பொருந்தும்
எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்
எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டுகள்.

புதன், 8 ஜூன், 2016

தமிழ்த்தேர்

தமிழ்த்தேருக்காகஎழுதப்பட்டது
பாராட்டு
தட்டிக்கொடுத்து பாராட்டப்படும் குழந்தை
எட்டாத உயரத்தையும் எட்டிப்பிடிக்கும்
கொட்டுமழைபோல் கொப்பளிக்கும் பாராட்டால்
தொட்டதெல்லாம் எட்டதிறமைக்கு அது ஊக்கமாகும்

அரசன் முதல் அரசியல்வாதிவரை இன்னொருவன்பாராட்ட
அன்று முதல் இன்றுவரை எதிர் பார்க்குமெண்ணம் ஏராளம்
தனக்குள்ளே தானிருக்கும் திறமைக்கு அங்கீகாரம்
மனமாற பாராட்டும் மாண்பு வேண்டும் அனைவருக்கும்
போட்டியிடுவோருக்கும் பந்தயத்தில் ஓடுபவருக்கும்
தேவை பாராட்டு உளமார்ந்த ஊக்கமாகும்
பதற்றப்படுவோருக்கும் பயம் கொள்வோருக்கும்
பாராட்டுதான் மாமருந்து மனித சக்திக்கு உந்து சக்தி
சுற்றி நின்று விசில் அடித்தால் குதிரைக்கும்சக்திவரும்
வெற்றிக்கோட்டை வெகு விரைவாய் எட்டிவிடும்
ஏற்றமுறச்செய்யவே சுற்றி இருப்போரையும்
போற்றிப்பாராட்டும் நல் குணத்தை பெற்றிடு

வல்லமை புகைப்பட போட்டி-66

குடி கார கணவன்
ஒரு புறம்
படிக்கும் பிள்ளைகள்
ஒரு புறம்
வீட்டு வருமானம்
போதாத குறை
ஒருபுறம்
வறுமையை ஓட்ட
வகையாய்தேர்ந்தெடுத்த
வளமான தொழில் இந்த
தொழிலுக்கு
மூலதனம் தேவையில்லை
வேண்டியது உழைப்பே
லட்சியங்கள் எல்லாம்
உயிர்பெறுவது
நடுத்தர வர்க்கத்து
மக்களால்தான்
வீடெல்லாம் பூவாசம்
வறுமைபோக்க
வீட்டு வேலை முடிந்து
பூக்கட்டும் வேலை
தினமும் நூறு ரூபாய்
தினக்கூலி தீர்ந்திடும்
தினப்படி கவலை
ஆனால் பூகட்டும்
பொன்னமாவின் கவலையெல்லாம்
பெண்கள் இன்று
அவிழ்த்த கூந்தலை
முடித்தால்தானே பூவைக்கமுடியும்
பூவைப்பது அநாகரீகமாய்
கருதும் காலமாகிவிட்டது
பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
போய் விடும் போலிருக்கிறது
ரிலையன்ஸ் நிறுவனமும்
பூக்களுக்கு வேர்ஹவுஸ்
அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
மண்தான் போங்க (சரஸ்வதிராசேந்திரன்)

பூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்

திங்கள், 30 மே, 2016

வல்லமை புகைப்படபோட்டி-65

இந்த வாரத்தின் சிறந்த கவிதையாக என் கவிதையை தேந்தெடுத்த திருமதி மேகலாராம மூர்த்திக்கும் வல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
காகமே உன்
தாகம் தீர்க்க
தண்ணீரும்
பசிக்கு அன்னமும் இட்டேன்
நீ சனீஸ்வரரின் வாகனமாம்
முன்னோர்களின் சின்னமாம்
நீ கரைந்தால்
விருந்தினர் வருவதாகவும்
நீ வலமாகப் போனால்
காரிய சித்தியாகவும்
உன்னைப்புகழ்ந்து
பாடியிருக்காராம்
காக்கைப்பாடினியார்
இதெல்லாம் எனக்கு
செவிவழி வந்த செய்திதான்
ஒற்றுமைக்கும்
பகிர்ந்துணவுக்கும்
கூடி வாழ்தலுக்கும்
உவமையாகச் சொன்ன
உண்மைத்தகவலுக்காகவும்
உயிர்களுக்கு உதவணும்னுதான்
தண்ணீரும்
அன்னமும் இட்டேன்                                                                                                    
அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
கடையிலிருந்தோ சிறுவர்
கையிலிருந்தோ
இதை பறித்து வந்திருக்கிறாயோ?
வேண்டாம் காகமே!
பறித்து வருவதும்
கவர்ந்து வருவதும் கூட
ஒரு வகையில் திருட்டுத்தானே?
எனக்கு இது வேண்டாம்!
அம்மா திட்டுவாள்
உன் அன்புக்கு நன்றி!

காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே

திங்கள், 9 மே, 2016

ஒரு கவிஞனின் கனவு 8-5-2016


08/05/2016
இன்றைய ‪#‎சிறந்த_ஹைக்கூ_கவிதையின்‬ வெற்றியாளர். சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
எல்லா வலிகளும்
ஞாபகப்படுத்துவது
அம்மா
.
சரஸ்வதி ராஜேந்திரன்

வல்லமை புகைப்படபோட்டி -62 8-5-2016

 வல்லமை புகைப்பட போட்டி 62ல் என் கவிதையை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்மேகலா ராமமூர்த்திக்கும் வல்லமை குழுவிற்கும் என் மன மார்ந்த நன்றிகள்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர் நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?
நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…
ராமன் ஆண்டாலென்ன
ராவணன் ஆண்டாலென்ன
ராப்பகல் பாராமல் காலில்
கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
சுமைதாங்கியாய்ப் போனாலும்
அசரவில்லை என்றும் அதனால்
உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
இன்னபிற சாமான்களும் வந்து
என்ன உபயோகம்?
அதை இயக்க காசு வேண்டாமா ?
வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
கற்ற (அரசியல்) வித்தை காட்டி
உற்றவர்களும், உறவுகளும்
உல்லாசத்தை அனுபவிக்க
உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!
அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

செவ்வாய், 3 மே, 2016

ஒரு கவிஞனின் கனவு --3-5-2016

03/05/2016
இன்றைய ‪#‎சிறந்த_சென்ட்ரியூ_கவிதையின்‬ வெற்றியாளர். சரஸ்வதி ராஜேந்திரன், அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤x
இலவசத்தால் ஈர்க்கப்பட்டு
தூண்டிலில் மாட்டியது
மீன்
.
சரஸ்வதிராசேந்திரன்