வெள்ளி, 10 மார்ச், 2023

இங்கே இருக்கிறேன்

 இங்கே இருக்கிறேன்

இசைபட வாழநினைத்தேன்ஆனால்
தினமும் வசைகளைக்
கேட்டே வலுவிழக்கிறேன்
காரிய காரணமின்றி
கடினமாக பேசுவது
குற்றம்கண்டுபிடிப்பதிலேயே பொழுதுகள்
சரியாக இருக்கிறது
சிலருக்கு
எல்லாவற்றையும்
எருமை மாட்டின் மேல்
மழைபொழிந்தார்
போல் பொறுத்துக்
கொள்கிறேன்
எல்லா நிலைகளிலும்
இதுபோன்ற
மனிதர்களை நான்
சந்தித்துஇருக்கிறேன்
பாவம் அவர்கள்
எப்போதுமே தங்கள்
உணர்ச்சி புண்படுத்தப்பட்டதை
போன்றநிலையில்
இருப்பதால்தான் மற்றவர்களை காயப்படுத்துகிறார்களோ
சதா எதிர்ப்புணர்ச்சியை
காட்டுகிறார்என்மீது
வாழ்வு தொலையாதிருக்க
பொறுத்தல் அவசியம்
முட்டைமீது நடப்பதுபோல
பழகவேண்டியுள்ளது
அவரிடம்
அவர் அனுதாபத்துக்குரியவர்
கண்டனத்துக்குரியவர்அல்லர்
உண்மையான கோபம் இல்லை
ஏதோ துன்பத்தில்
இருக்கிறார்கள்
இதையெல்லாம் எண்ணித்தான்
நான் இன்னும் இங்கே
இருக்கிறேன்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran
மனரீதியாக ஒரு பாத்திரத்தை தன்பாத்திரமாகப் பாவித்து கவிதை தந்திருக்கிறார் கவிஞர்!
கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார்!
மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே!
May be an image of 3 people and text that says '................... பைந்தமிழ்ப் பூம்புனல் - கவிஞர் வெற்றியாளர் 4 சரஸ்வதி ராசேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக