விதுரர்
பணிப்பெண்ணுக்கும் வியாசருக்கும்
திருமேனிக் கொண்டதோர்
தங்க மழலை அருள்வாணி
கோர்த்தமலர் விதுரர்
பணிப்பெண்ணுக்குப் பிறந்தனால் பரிகசிக்கப்பட்டு
பதவிக்கு அருகதையற்றாலும்
பாசத்தால் எல்லோரின்
மதிப்புக்கும் மரியாதைக்கும்
உரியவரான அமைச்சர்
விதுரர் வில்லெடுத்தால்
அர்ச்சுனனின் காண்டீபமும்
காணாமல் போகும்
வந்தவழி எந்தவழியானாலும்
விதுரர் தந்தவழி
நீதிவழியே சொந்தவழியாய் நின்றவர்
விதுரரின் விதுரநீதிநூல்
விலைமதிக்க இயலாத
வாழ்க்கைப் பாடத்தை
தீர்க்கமாய் தரும்
மார்க்கம் கொண்டது
சரஸ்வதிராசேந்திரன்
Boost this post to reach up to 408 more people if you
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக