வெள்ளி, 10 மார்ச், 2023

மலயமான் திருமுடிக்காரி

 மலயமான் திருமுடிக்காரி

மலைநாட்டை ஆண்ட மன்னன் காரி
தலைமை ஏற்கும் தனிப்பெரும் ஆற்றலுள்ளவன்
அலைபாயா நெஞ்சம் உடைய ஆண்மையுள்ளவன்
கலையறிவு பெற்று கசடற வாழ்ந்தவன்
கடையேழு வள்ளலில் ஒருவன் காரி
படையில் வேழமாய்ப் போரிடும் பலசாலி
கொடையில் சிறந்த கொள்கையில் நின்றவன்
நடைமுறையில் உள்ள நடுநிலைப் பண்பை
கடைபிடித்து வாழ்தலே கடமையாய்க் கொண்டவன்
பஞ்சக்கல்யாணி புரவியில் பவனி வந்து
வெஞ்சமரில் வெற்றி வாகை சூடுவான்
பாரில்பெற்ற பெரும் வளங்களை எல்லாம்
மாரியைப்போல வாரி வழங்கினான் மக்களுக்கு
காரிமன்னன் கபிலரிடை கனிந்தவொரு நட்பால்
பாரிமகளிர் இருவருக்கும் அடைக்கலம் அளித்தவன்
கபிலரும் பாணரும் கல்லாடனாரும் கீர்த்தனும்
காதுகுளிரவும் கண்கள் ஒளிரவும் பாடிப்புகழ்ந்தனர்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக