வெள்ளி, 10 மார்ச், 2023

பசந்து பனிவாரும் கண்

 பசந்து பனிவாரும் கண்

++++++++++++++++++++++++
அங்கம் படர்ந்த
தங்கத் தலைவன்
எங்கே போனான்
இங்கிதம் இன்றி
திங்கள் கரைய
தினமும் வதங்கி
கங்கையாம் கண்ணீரில்
கரைந்தே போகிறேன்
ஏங்கியே இளைத்தேன்
ஏந்திழை நானும்
தூங்கி விட்டானோ
துணைவியை மறந்து
பொங்கும்‌ மனத்தால்
பொலிவிழந்த உடலும்
தங்குமோத் தெரியவில்லை
தலைவனைக்காணா உயிரும்
கங்குலாய் எரிகிறது
காமத்தீயில் அங்கமும்
மங்கி மறையுமுன்னே
மன்னன் வருவானோ
மங்கையின் தாபம்
நீங்கிட கரிசனமாய்த்
தாங்கித் தழுவுவானா ?
தாகத்தை தீர்ப்பானா?
அணைக்கும் அணைப்பில்
அணையும் தீயும்
அனைத்தும் அடங்கும்
அன்பு‌‌ பிணைப்பில்
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 3 people and text that says 'பைந்தமிழ்ப் பூம்புனல் குறள்மொழி இன்பம் 131 பசந்து பனிவாரும் கண் நிறுவனர் கவிஞர் மீராஸ்ரீ நடுவர் வெற்றியாளர் கவிஞர் கவிஞர் கிருஷ்அபி சரஸ்வதி ராசேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக