வெள்ளி, 10 மார்ச், 2023

எனது முற்றமும் எனது மரமும்

 எனது முற்றமும் எனது மரமும்

கண்விழித்ததுமே
நாசியைத் தாக்கும்
முற்றத்தில் நான்
வைத்த பவளமல்லி
முற்றத்தில் இறைந்து
கிடக்கும் பூக்களைப்
பொறுக்கி மாலைகட்டி
கண்ணன் படத்துக்குப்
போடுவதில்ஆரம்பிக்கும்
காலைப் ‌பொழுது
வீட்டைச் சுற்றி பூமரங்களும்
காய்கறிகளுமாய் பசுமையுடன்
பார்ப்பவர் உள்ளத்தைக்
பரவசப்படுத்தும்
நாற்பது வருடம்
உயிரோடும் உணர்வோடும்
ஒன்றிய வீடும் முற்றமும்
கணவர் போனதும்
பிள்ளைகளின் அழைப்புக்கு
இணங்கிட உணர்வுக்கும்
வீட்டுக்கும் பூட்டு
வீட்டிற்கும் மரம்செடிகளுக்கும்
உணர்வுஉண்டாமே
என்னைப் பார்க்காத ஏக்கமோ
நீருக்குத் தவித்து பவளமல்லி
காய்ந்து உயிரைவிட்டிருந்தது
பராமரிப்பின்றி நோஞ்சான்
குழந்தைபோன்று சூம்பிக்கடந்தது
தென்னைமரம்
தனித்த நானும்
அவரில்லாமல்
தளர்ந்துதான் நிற்கிறேன்
என் முற்றமும் மரமும்
இல்லாமல்
எண்ணூறடி பிளாட்டில்
எதுவுமே செய்யமுடியாமல்
மாற்றம் என்பது
மானுடத்தத்துவம்
தேற்றிக்கொள் என்கிறார்கள்
பிள்ளைகள் முற்றத்தைமறக்கச்சொல்லி தொட்டிச் செடி
வாங்கித்தந்து
குருவிகளும் கிளிகளும்
அணில்களும் கொஞ்சும்
காதல் இல்லாத
சோகத்தில்
காய்ந்துக்கிடக்கிறது‌மனது
உணர்வுகள் செத்துதான் கிடக்கிறேன்இது விதியில்லாமல் வேறென்ன?
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக