வெள்ளி, 10 மார்ச், 2023

துன்னலம் தோய்ந்த மார்பே

 துன்னலம் தோய்ந்த மார்பே

குப்பைக் கூளம் கழுநீர் சேற்றில்
களித்துக் கிடக்கும் கண்ட இடமெல்லாம்
தூய்மை இன்றி வாய்வைக்கும் பன்றியாய்
ஆற்றுக் குட்டையில் ஆழ்ந்து கிடக்கும்
நாற்ற மெடுக்கும் ஆறல் மீனை
நீரில் மூழ்கி தின்னும் நீர்கோழியாய்
நாற்றம் பிடித்துப்போய் தினம் தினம்
தேடிப் போய்த் தின்னும் நீர் நாயாய்
உயிரில் கலந்து உள்ளம் நிறைந்து
உறவில் சிறந்த தும்பப் பூவிதழ்
தூய்மை கொண்ட குலப்பெண் நானே
பக்குவம் மிக்க பண்பில் வளர்ந்தவள்
இல்லற வாழ்வில் இரு பாலருக்கும்
அகம்புறம் சுத்தம் அவசியம் வேண்டும்
கறைபடு வாழ்வை கையகப் படுத்தி
கயமை மிகுபல கற்றீர் நீரே
எச்சில் கனியை என்றும் விரும்பேன்
பரத்தையர் பற்றிய மார்பை பற்றேன்
தள்ளியே நில்லும் தனித்தே வாழ்வோம்
தாழ்வுறும் செய்கை வாழ்வுக்குத் தேவையில்லை
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of text that says 'நிறுவனர் நடுவர் துன்னலம்தோய்ந்தமார்பே சன்பம் ஐங்குறுநூறு yЛARЛЛЛЛΑ KRЛЛЛЛRR சிறப்பு வெற்றிக் கவிஞர் சரசுவதி ராசேந்திரன்'
Boost this post to reach up to 406 more people if you spend ₹578.
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக