சனி, 11 மார்ச், 2023

நின்னிலும் நல்லன்

 நின்னிலும் நல்லன்

வெண்ணிக் குயவளாம் வித்தகப் புலவர்
தன்னின் நியாயத்தை தயங்காமல் பாடினாள்
கரிகால் வளவனின் களத்தின் வீரத்தை
அரிய சாதனை ஆற்றினான் கல்லணையால்
தென்னவனே நீ நல்லவன் தானெனினும்
நின்னினும் அவன் நல்லன் அல்லவோ
மானம் பெரிதென நாணி உயிர்விட்டு
மன்னன் சேரன் மகிமை கொண்டானே
களிப்புநடை போடும் யானையின்மேல் அமர்ந்து
கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டி
காற்றையே ஆண்ட வலிமைவழி வநதவனின்
போற்றல் அறியவைத்த தமிழரின் பெருமை
சாற்றிய வெண்ணிக் குயத்தியின் புகழ்ஓங்குக
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.
Boost this post to reach up to 408 more people if you spend ₹578.
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக