திருவெம்பாவை
வாழப் பிறந்த வளமார் உயிரினம்
வாழையடி வாழையாக உயர்வாக்கி வைக்கும்
உயர்ஞானப் பேறு அரிதென்று அடியார்கள்
இளமை பருவம் முதுமை இம்மூன்றும்
வளப்பம் காண வரமே வாய்ப்பாய்
வாதவூரார் அருளிய திருவெம்பாவை பாடுவது
பிறப்பழிய வித்தாக காட்டிய வழியாகும்
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
அண்ணா மலையானை அதிகாலை எழுந்து
நீராடி நன்னீர ணிந்து தோழிமார்
நாங்கள் அவன் துதியைப் பாடும்
பாட்டொலி உன் செவியில் விழாதவாறு
பட்டுத்துணி போர்த்தி பாங்காய் உறங்குகிறாயே
ஈதென்ன பேருறக்கம் எழுவாய் என் தோழி
செவிப்பறையில் நுழைய வில்லையோ பாட்டு
எங்கள் பாட்டொலிக் கேட்டு வீதியில்
நடந்தவள் விம்மி அழுது வேண்டுகிறாள்
வீடு தேடிவரும் மகாதேவனைக் காண
விழையாது உறங்குவது நியாயமா எழுந்திரு
வாவியுள் நீராடி கூத்தனை வணங்குவோம்
என்னடி கேலி பேசுகிறீர் அயர்ந்திட்டேன்
அயர்ந்தாலும் கனவில் அந்த முக்கண்ணனை
உயர்ந்தே இருக்கும் சிவகாமி நாதனை’
இமைப் பொழுதும் நீங்கா சிவனை
இடையறாது நினைத்தே போற்றுகிற நானா
மறப்பேன் வாருங்கள் பாடிப் புகழ்வோம்
மார்கழி நீராடி உண்ணாமுலையை வணங்குவோம்
நோற்றிடும் நோன்புகள் நுட்பம் செயற்படுத்தும்
நற்றிறம் நன்மை தந்து வாழ்த்திடும்
இறைநெறி வாழ்க்கையில் எல்லாம் நிகழும்
அருட்பெரும் சோதியை அகமகிழப் பாடி
அவனது மலரடி போற்றிப் பாடேலோரெம்பாவாய்
சரஸ்வதிராசேந்திரன் See Less
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக