வெள்ளி, 10 மார்ச், 2023

நனவினால் நல்காரை நோவர்

 நனவினால் நல்காரை நோவர்

_____________________________________
காதலிருவர் கருத்தொருமித்து
ஆதரவாய் ஒருவருக்கொருவர்
இல்லற வாழ்வில்
இணைந்தே இருவரும்
இன்பம் துய்த்தாலும்
தனத்தை‌. ஈட்ட
தலைவன் அவனும்
பயணம் கிளம்பினான்
பிரிவைத் தாங்காது
அரிவை அவளும்
அலர்ந்து போனாள்
பசியும் ‌ மறந்தாள்
பாயும் நொந்தாள்
கவலையில் மூழ்கி
நிசியில் கண்ணயர
கனவில் வந்தான்
காதலன் அவனும்
கதைகள் அளந்தான்
கவிதைப் பொழிந்தான்
சிதறிய மனதை
உதறி எழுந்தாள்
விளைபயிர் போல
வினையருள் கூடி
களிப்பு உற்றாள்
கனவினைப் போற்றினாள்
ஊறிய ரத்தம்
கூடிய சக்தியால்
தேறினேன் திடமாய்
கனவில் பிணைந்து
களித்திடும் இன்பம்
சொல்லிப் புரிவதில்லை
நனவினால் நல்காரை
நங்கை எவளும்
நோவர் தோழி
சரஸ்வதிராசேந்திரன்
அருண் பிரசாத்
Saraswathi Rajendran
கனவில் தோன்றிய தலைவனின் செயலால்
விளைபயிர் போலே வினையருள் கூடிக் களிப்புற்றத் தலைவியின் தன்மையுரைத்தக் கவிதை சிறப்பு கவியே
🤝🏻👌🏻🤝🏻👌🏻🤝🏻👌🏻🤝🏻👌🏻
May be an image of 5 people and text that says 'பைந்தமிழ்ப் பூம்புனல் குறள்மொழி இன்பம் 129 நனவினால் நல்காரை நோவர் பதமிழம நிறுவனர் கவிஞர் மீராஸ்ரீ நடுவர் கவி ஞர் அருண் பிரசாத் வெற்றியாளர் கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக