சனி, 11 மார்ச், 2023

ஆய் அரண்டிரன்

 ஆய் அரண்டிரன்

பொதிகை மலையில்
பிறந்த கொடையாளன்
ஆய் கடையெழு
வள்ளல்களில் ஒருவன்
ஆய்குடியை ஆண்ட
ஆயர்குல மன்னன்
வேள் ஆயின்
ஈகை போற்றி
ஈண்டு இங்கே
காண்போம் வாரீர்
அறநிலை வணிகனல்ல
ஆய் அரண்டின்
நற்செயல் புரிவதை
நாளும் கடைபிடிப்பவன்
வீரமும் ஈரமும்
விரலிடைக் கொண்டவன்
ஆன்றோர் வழிநெறியில்
சான்றோனாய்த் திகழ்ந்தவன்
நாகம் தந்த
ஒளிமிகு ஆடையை
ஈசனுக்கு நல்கி
கொடையில் சிறந்தான்
கொள்கையில் நின்றான்
உறையூர் முடமோசியாரும்
துறையூர் ஓடைக் கிழாரும்
புறநானூறில் பதித்துள்ளனரே
ஆய் அரண்டின் புகழை
தோய்ந்து நாமும் தொழுவோமே
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of text that says 'ព ធ காவியக் களஞ்சியம் ஆய் அண்டிரன் சிறப்பு வெற்றி சான்றிதழ் கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுறுகிறோம்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக