வெள்ளி, 10 மார்ச், 2023

மெளனம் மெளனம் மெளனம்

 மெளனம் மெளனம் மெளனம்

கொப்பும் கிளையுமாய்
செழித்துக் கிடந்த
அந்த காய்க்காத மரம்
வீழ்ந்தது இன்று
ஆறுமாதமாய் அது
பட்ட வலியும் வேதனையும்
உடமை உடையவர்கள்
கடமைக்காக கூட
எட்டிப் பார்க்கவில்லை
வீழ்ந்தது கேட்டதும்
வீழ்ந்து கிடக்காமல்
பறந்து வந்தனர்
சாய்ந்ததை எடுக்காமல்
மாய்ந்து மாய்ந்து
அள்ளினர் அடிதடி
சண்டையுடன் தொகையையும்
நகையையும்
எல்லாம் முடிந்தது
நியாயமா பார்த்தா
இதெல்லாம் உனக்குத்தான்
நீயே உனக்கு வேண்டியதை
எடுத்துக் கொண்டு மீதியை
அவர்களுக்குகொடு
அது வாய் வாரத்தைதான்
வாய்மை அல்ல
அப்பொழுதும் நான்
மெளனமாய்த்தான்
நின்றிருந்தேன்
இதோ இப்பொழுதும்
அவர்கள் என்னைக் கடந்து
போனதையும்
மெளனமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஊமையாய் மொழியினறி
சரஸ்வதிராசேந்திரன்
May be a cartoon of 4 people and text that says 'மௌனம் பைந்தமிம் பூம்பு ணல் வெ 4 றி யா எர் சரஸ்வதி ராசேந்திரன் வி ஞ ர்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக