வெள்ளி, 10 மார்ச், 2023

குறளோடு கவிபாடு__90

 குறளோடு கவிபாடு__90

உள்ளன்பு ஒன்றால்
உலகையே வெல்லலாம்
உய்த்துணர்ந்து வாழ்ந்திடின்
உயிர்ப்பு என்றும்
வாழ்க்கை நிலைகள்
வளம்மிக வேண்டின்
ஏற்றிடு அன்பெனும்
பொன்மனம் கொண்டு
மனத்தின் கண்
அன்பு இல்லாதான்
இல்லறம் பாலைவனத்திற்கு
சமம் ஆகுமன்றோ
அன்பிலாதார் உடம்பு
தோல் போர்த்திய
எலும்பு கூடாகும்
வெற்றுடலால் பயனில்லை
வள்ளுவர் சொன்னதந்த
வாழ்க்கை நெறிகளில்
தெள்ளத் தெளிவுடன்
தேறுவோம் நாம்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக