வெள்ளி, 10 மார்ச், 2023

நவீன கவிதை சற்றுமுன்பு நாம் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்

 நவீன கவிதை

சற்றுமுன்பு நாம் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்
நிழல் பின்னிக் கிடக்கும்
வேப்பமரத்தடியில் கால்கடுக்க நின்று
கதையளந்ததைப் பற்றியா
கல்லூரிக்கால
இளைய பொழுதுகள்
கண்களுக்குள் காதலாய்
நிரம்பி வழிந்ததைப் பற்றியா
நாம் சற்றுமுன்பு
எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்
அறிவுக்கு விருந்தான
ஆயிரம் நூல் கற்றும்
அறியாமை அகலாததைப் பற்றியா
எதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்
உனக்கும் எனக்கும் நடந்த
திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருதோமா
பூத்துக் காய்த்து
பழம் தந்து ஓய்ந்த நிலையிலும்
காய்ந்த செடியில் ஒட்டிக்கொண்டிருக்கும்
விதையைப் பற்றியா
பிள்ளகளால் விரட்டப்பட்டாலும்
நமக்குள் உள்ள ஆத்மார்த்தமான
காதலைப்பற்றி
நிழல் பின்னிக்கிடக்கும்
வேப்பமரத்தடியில் அமர்ந்து
சற்றுமுன்அதைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக