வெள்ளி, 10 மார்ச், 2023

அஞ்சிறைத் தும்பிகண்டது மொழியுமோ

 அஞ்சிறைத் தும்பிகண்டது மொழியுமோ

மஞ்சத்தில் தலைவன்
அஞ்சுகத் தலைவியைத்
துயத்துக் கிடக்க
கார்குழலாள் கூந்தல்
காற்றில் அலைந்து
தலைவனின் முகத்தில்
படர கூந்தலின் மணம்
நாசியைத் தொட
அது இயற்கை மணமா
செயற்கையானதா எனத்தடுமாறித்
தெளியத் தும்பியை வினவினான்
தும்பியே தேன் உண்ணும் காமம் செப்பாது
உண்மையாக நீ கண்டதைச் சொல்
மயிலின் தோகைபோன்ற இவளின் கூந்தலைக்
காட்டிலும் நல்ல மணமுள்ளப் பூக்கள்
உள்ளனவா சொல் ? செண்பக ராசனின்
சிந்தையைக் குடைந்த ஐயத்தை நீக்க
அரசவை கூட்டி ஐயம் தீர்ப்போருக்கு
ஆயிரம்பொன் அறிவிக்க
தருமியை வைத்து திரு
விளையாடல் செய்ய
ஈசனும் பாடலை தருமியிடம்
தந்த அவைக்கு அனுப்ப
பாடலை தவறென்று நக்கீரர் சுட்ட
அனலாக் கொதித்து
அவைக்கு ஈசனே
சென்று தெளிவுபடுத்த
அஞ்சிறைத் தும்பி கண்டது மொழியுமோ
என்றே இறையனாரும் செப்பியதே பதிலாகும்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக