வெள்ளி, 10 மார்ச், 2023

வனவாசம்

 வனவாசம்

வாலைக் குமரியை விட்டு
வயிற்றுப் பிழைப்புக்காக
வேலைத் தேடி கடனை வாங்கி
பாலை தேசம் பயணம் போனால்
சுற்றம் பெற்றவரை விட்டு
சுமைகளை சுமக்கிறோம்
சுமை தாங்கியாய்
செய்யும் வேலையில்
தவறி ழைத்தால்
செருப்படி போன்ற
பேச்சுக்களையும் தண்டனையும்
செம்மையாய் கேட்கத்
தோன்றும் கொடுமை
வெயிலில் கால்கள்
வெந்துதான் போகும்
அங்கே அடுப்பெரிய
இங்கே உடலே எரிகிரது
இரவானால் வெறுமையை
அழிக்க முடியாமல்
ஓய்ந்துதான் போகிறது மனது
அந்தரத்தில் தொங்கும்
அபூர்வ பட்சிபோல் துயரத்தில்
துவண்டுதான் போகிறோம்
தினமும் ஒட்டகப்பால் குடித்து
ஒவ்வாமையே வரும்
கால்வலி கைவலிக்குக்
கரிசனம் காட்ட யாருமில்லாக் கொடுமை
பெறும் பொருள் அயலகத்தில்
கூடுதலானாலும்
பெறும் இழப்புகளும் கூடுதல் தான்
இளமை இன்பம் எல்லாம் பறிபோய்
மீன் அழுவது நீருக்குள்
ஆண்அழுவது உள்ளுக்குள்
தொலைதூர பயணத்தால்
தொலைத்தது ஏராளம்
கால் வயிறு கஞ்சி குடித்தாலும்
தாய் நாட்டிற் கீடாகுமா ?
பிறந்த பிள்ளையை
அருகிலிருந்து பார்க்காமல்
பெத்த தாய் செத்ததிற்கும்
போகமுடியாமல்
வாட்ஸப்பிலேயே வருத்தம்
தெரிவித்து வாழும் வாழ்க்கை இருக்கே
அதைவிடவா பெரிது வனவாசம்
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்தால் .....இருக்கலாம்
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லையே
சரஸ்வதிராசேந்திரன்
முனைவர்
செல்வா ஆறுமுகம்
Saraswathi Rajendran
இரவானால் வெறுமையை
அழிக்க முடியாமல்
ஓய்ந்துதான் போகிறது மனது.
ஓயுமா என்ன...?
நினைத்தாலும் இயலாதே...?
பெறும் பொருள் அயலகத்தில்
கூடுதலானாலும்
பெறும் இழப்புகளும் கூடுதல் தான்
இளமை இன்பம் எல்லாம் பறிபோய்.
வலி...வலி...
வலி...
வலி...
வேறென்ன சொல்ல...?
மீன் அழுவது நீருக்குள்
ஆண்அழுவது உள்ளுக்குள்
தொலைதூர பயணத்தால்
தொலைத்தது ஏராளம்.
இந்த வரிகளுக்கு என்ன சொல்வது நான்...?
என்ன சொன்னாலும் அது - அயல் தேச வனவாசம் அனுபவிக்கும் ஒருவனின் உணர்வுக்கு ஈடாகாது.
பிறந்த பிள்ளையை
அருகிலிருந்து பார்க்காமல்
பெத்த தாய் செத்ததிற்கும்
போகமுடியாமல்
வாட்ஸப்பிலேயே வருத்தம்
தெரிவித்து வாழும் வாழ்க்கை இருக்கே
அதைவிடவா பெரிது வனவாசம்
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்தால் .....இருக்கலாம்
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லையே.
வலி மிகுந்த வரிகள்...
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்தால் .....இருக்கலாம் - அருமை...அருமை...இல்லையேல் இறக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வனவாச வலிகளை வார்த்தைகளில் வாரி இறைத்திருக்கிறீர்கள்.
வலி மிகுந்த சிறப்பு.
வாழ்த்துகள் கவிஞரே.
May be an image of 2 people and text that says 'நிலாச்சோறு நிலாச்சோறு முகநூல் குழுமம் சான்றிதழ் முத்து மூன்று வைரம் ஐந்து 11 தலைப்பு வனவாசம் வெற்றியாளர் நடுவர் sncan1880 கவி ஞர். செல்வா ஆறுமுகம் சரஸ்வதி ராடேந்திரன் நாள்.. 14/08/22 முதல் 18/08/22 வரை Jub 1319702714'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக