நப்பின்னை
கண்ணன்அவன்மணந்த
எண்மரில் முதலாவது
நப்பின்னை என்ற
கொஞ்சுதமிழ் பேச்சழகாள்
பிஞ்சுமுகம் கொண்டவள்
தாமரை போல் முகத்தாள்
நல்லமனம் கொண்ட
நப்பின்னை கும்பகன்மகள்
காலநேமியன் என்ற
கொடுமையான அரக்கனின்
ஏழு பிள்ளைகளும்
எருதுகளாய் மாறி
இடர்களைச் செய்து
கும்பகனின் பசுக்களை
கொடுந்துயர்செய்து அழிக்க
அரக்கரை அழிக்க
அதிரடியாக முரசறிவித்தான்
அரக்கர் எழுவரையும்
அழிப்பவருக்கே நப்பின்னை என
யாரும் முன்வராதபோது
கும்பகன் மைத்துனன்
நந்தகோபனிடம் தன்
நிலையைப் பகர
நந்தகோபன் தன்மகன்
கண்ணனையும் அழைத்துவர
எழுவரையும் எறித்தழித்து
எம்பெருமான் கண்ணன்
எழிலழகி நப்பினையை
ஏற்றான் துணைவியாக
சிலப்பதிகாரத்திலும் சீவகசிந்தாமணியிலும்
கலித்தொகையிலும்
நிரவிக் கிடக்கும்
நந்தகோபன் மருமகள்
நப்பின்னையின் புகழை
நாவார பாடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக