தவளைகள்
சூழ்ச்சிகள் தெரியாது
சுழற்சியும் கிடையாது
எக்கணமும் எப்போதும்
நினைவுகளுடன் வாழ்வது
உலகத்தில் உள்ளதை
உணராமல் வாழ்தல்
குளத்தில் கிணற்றில் கிடக்கும்
தவளை மனிதர்கள்
கிணற்றில் விழுந்த நிலவைப் பிடிக்க
தவ்வித் தவ்விக் குதித்துக் கிடந்தது
வானத்தில் வெள்ளை காக்கா பறக்கிறது
என்று சொன்னாலும் நம்பும் கூட்டமிது
தன் வட்டத்தை
விட்டுவெளியே வரவும்
போலி எது நிஜம் எது என்று
கண்டு கொள்ள முடியாத
மூட நம்பிக்கைகளில்
மூழ்கியே வெளிச்சத்தை காணமுடியா
கொடுமையின் உச்சம்
நிசப்த இரவுகளில்
நிம்மதியை குலைக்கும் வண்ணம்
குரல் கொடுத்து
இருப்பிடத்தைக் காட்டி
இரையாகும் அவலம் போல்
இடம்பொருள் தெரியாமல்
மிகையாய் பேசி
வலை சிக்கிக் கொள்ளும் மானாய்
சில கிணற்றுத் தவளைகளாய்
இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக