#குறள்மொழி இன்பம் -101
கூடிக் களித்தனர்
அன்புடன் கூடிய
ஆனந்த வாழ்க்கை
சுகமெலாம் சூழ
சுகித்துடன் வாழ
பொருளது தேட
பிரிந்து சென்றான்
தலைவனைப் பிரிந்த
தலைவியும் தவித்தாள்
துன்பங்கள் கோடி
தொடர்ந்தது பிரிவால்
தேயும் நிலவானாள்
தேகமும் பசலையால்
மெலிந்து வெளிற
கேளடி தோழி
காதல் உன்னி
உளமிழந்து போகிறேன்
உணர்ச்சிகள் அற்றே
பகலும் இருளாகுதே
பிரிவால் வாட்டமடையுதே
மீண்டும் திரும்பிட
மனமோ ஏங்கிடும்
திரும்பி வந்தால்
ஊடல் கொண்டே
கோபம் கொண்டாள்
வாலறு பல்லியாய்த்
துள்ளிமனமது பதறி
துவண்டாள் பசந்தாள்
காதலன் சென்றிட
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக