வெள்ளி, 10 மார்ச், 2023

நக்கீரர்

 நக்கீரர்

மதுரை கணக்காயனார்
மகனாய் பிறந்து
சங்கப் புலவரில்
தங்கத்தமிழ் வளர்த்த
தலை சிறந்தவனானார்
பெரிதும் புகழப்படும்
திருமுருகாற்றுபடை எனும்
இனிய பாடலை
ஆசிரியப்பாவால் ஆக்கி
ஆற்றுப் படுத்தியவர்
ஆழ்ந்த புலமையும்
அஞ்சா நெஞ்சமும் கொண்டு
நெற்றிக் கண்ணை காட்டினாலும்
குற்றம் குற்றமே என
சிவனாரிடம் வாதம் செய்து
பின் தவறுணர்ந்து
சங்கரனைப்போற்றி கயிலைபாதி
காளத்தி பாதியென அந்தாதிப்பாடி
ஆற்றுப் படுத்தியவன்
பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியனை பாட்டுடைத்
தலைவனாக் கொண்டு
சாற்றியப் பாடல் நெடு நல்வாடை
சரமாய்த் தொடுத்தவர்
நற்றமிழ் புலவர் நக்கீரர்
நின்புகழ் பாடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக