பட்டாம்பூச்சியானவள்
அருவருப்பாய் இருந்த
புழுவிற்கு
அட்டகாசமான
வண்ணச் சிறகுகளை
அசைத்து
அதுவாகத்தான் கையில்
தேடி வந்து அமர்ந்தது
அவளும்நானும் பேசிய
காதல் சொற்கள்
கடற்கரையெங்கும்
சிதறி கிடக்கின்றன
கடல் நுரையாய்
ஆனால் அவளோ
மலர்விட்டு மலர் தாவும்
வண்டான பிறகு
கலக்கமும் இல்ல களிப்பும் இல்ல
கல்லாய் கிடக்கிறது மனம் போன இடமும் மகிழ்ச்சியைத் தரவில்லைசலனத்தால் சங்கடத்தை மறைக்க
காடு மேடெல்லாம்
சுற்றி அலைகிறாள்
நாடோடியைப்போல்
பட்டாம் பூச்சியாய்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran
விநயமான வினாவோடு தொடங்குகிறது கவிதை!
அருவருப்பு அழகானது எப்படி?
பருவம் உருவை மாற்றியிருக்கலாம்!
அவளும் நானும் பேசிய காதற் சொற்கள் கடற்கரை எங்கும் சிதறிக் கிடக்கின்றன கடல் நுரையாய் -அழகான வரிகள்
பட்டாம்பூச்சியாய் இருந்த அவள் வண்டான போதும் மனத்தில் கலக்கம் இல்லை களிப்பும் இல்லை
ஆனால் மனம் கல்லாய்க் கிடக்கிறது!
அவளுக்கும் சங்கடம்!
அதை மறைக்கவே காடுமேடெல்லாம் சுற்றி அலைகிறாள்!
கவிதை மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
கவிஞரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக