வெள்ளி, 10 மார்ச், 2023

நுண்ணியர் எம்காதலவர்

 நுண்ணியர் எம்காதலவர்

†*****************†**********
காதல் கொண்டுகடிமணம் பூண்டு
காமம் மிகுந்து கலந்தே கிடந்த
தலைவன் ஒருநாள் காரிய நிமித்தம்
பிரிந்தே செல்ல தலைவன் பிரிவால்
தலைவி வருந்தி தேறா மனத்துடன்
தேம்பியே கிடக்க தலைவி நிலையறிந்த
தோழி தலைவியைத் தேற்ற விரும்பி
உன்னைவிட்டு போக மனமும் துணிந்ததோ?
தனிமையில் விட்டுப் போவது
தலைவனுக்கழல்ல
தேற்றுவதாய் எண்ணித் தலைவனைத் தூற்ற
தன் முன்பே தலைவனை இகழ்ந்ததால்
தணலாய்க் கொட்டினாள் தோழியிடம் வார்த்தைகளை
அடி போடி பைத்தியக்காரி நீ
உடலைவிட்டு மறைந்தாலும்
உள்ளத்தை விட்டு
ஒரு போதும் மறையவில்லை
அவன்
என் கண்ணுக்குள்ளே பாரடி தலைவனை
என்னவன் எங்கும் போக வில்லை
இமைக்க நான் மறந்தாலும் வருந்துவனில்லை
காரணம்
அவன் நுட்பமானவன்
எனை விட்டுப் போகான்
கண்ணின் பாவையில்
கலந்தே கிடக்கிறான்
சரஸ்வதிராசேந்திரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக