வெள்ளி, 10 மார்ச், 2023

குறள் மொழி இன்பம் 107 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்று மெவ்வநோய் தீர்க்கும் மருந்

 குறள் மொழி இன்பம் 107

நினைத்தொன்று சொல்லாயோ
நெஞ்சே எனைத்தொன்று
மெவ்வநோய் தீர்க்கும் மருந்து
*********************************
மனதால் விரும்பி
மணமும் முடித்து
இரவும் பகலும்
இணை பிரியாது
இரண்டறக் கலந்து
இன்பத்தில் திளைத்தனர்
சிறப்புடன் என்றும்
சீர்பெற்று வாழ்ந்திட
பொருள் வயின்பால்
புறப்பட்டான் தலைவன்
கடமை எண்ணி
கலக்கம் மறைத்து
இனிதாய் வாழ்த்தி
இணையை அனுப்பினாள்
நாட்கள் கடந்தன
நாயகன் வரவில்லை
காரணம் புரியாது
கவலையில் தோய்ந்தாள்
மண்டிய. காமம்
மனதை வாட்டியது
மோகம் துளைக்க
தேகம் துவண்டது
பணியின் நிமித்தம்
பிரிந்து சென்றவன்
தனிமையில் விட்ட
தலைவியை எண்ணானோ
புத்திக்கு எதுவும்
புலப்பட வில்லை
பித்துப் பிடித்ததுபோல்
பிதற்றி அலைகிறாள்
கண்மை கரைந்திட
கைவளை கழன்றிட
நடை பிணமாகி
நலமும்‌ கெட்டாள்
உடலும் மெலிந்து
உள்ளம் குலைந்தாள்
விரக தாபத்தின்
விரக்தியில் நோகிறாள்
நெஞ்சே சொல்வாய்
வஞ்சியின் மனநோய்க்கு
மருந்தேதும் உண்டா?
உண்டெனில் உரைத்திடுவாயே
சரஸ்வதிராசேந்திரன்
கவிதை சிறுவன்
Saraswathi Rajendran மிகவும் அருமையாக கவிதை எழுதி உள்ளீர்கள் எடுத்தல் தொடுத்தல் முடித்தல் இவ்வாறு கவிதையை கையாண்டு இருக்கும் உங்களது முயற்சி மிகவும் போற்றுதலுக்கு உரியது கடைசி வரியில் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சிறப்பாக இருந்தது தலைவியின் நிலையிலிருந்து எழுதிய கவிதை மிகவும் அருமை கவிதை வாழ்த்துக்கள்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக