வெள்ளி, 10 மார்ச், 2023

மலர் பண்பாடு

 மலர் பண்பாடு

தமிழர் பண்பாட்டின் அடையாளம் மலர்கள்
எழிலருள் இன்பங்கள் ஈந்திடும் வீடு
இணைத்து பிணைத்துஇயங்கவும் வைத்த
இணையிலா தொன்று ஈசன்கண் கூடு
ஐந்துவகை நிலத்தினை அறியவும் பயன்பட்டது
சிந்தனைகள் ஒன்றாகி பந்தமாகி நின்றது
பல வண்ணம் கொண்ட மலர்களில்
சில மட்டுமே பூசைக்கு ஏற்றது
பூத்து நிற்கும் சோலையில் புதுமலர்
பூமகளின் கூந்தலில் அழகாய் வீற்றிருக்கும்
மனிதர்களின் மங்கல விழாவில் மணம்பெறும்
மரண நேரத்திலும் மலர்களே அஞ்சலியாகும்
மலராய் மணமாய் மறைகள் ஓதி
பலருள் புகுந்து பயனருள் ஓம்பிநீன்றது
அகவாழ்விலும் புறவாழ்விலும் சிறப்புப் பெற்றது
ஏகமாய் சுடர்வீசி இயங்கியது சங்ககாலத்தில்
அருள்பெறும் வாழ்வே அதனூங்கு முண்டு
மருத்துவத் திற்கும் மலர்கள் துணையுண்டு
மகிழம்பூ முகர வாந்தி நிற்கும்
மந்தாரப்பூ உடல் கொதிப்பு நீக்கும்
வெற்றிபெற்ற மன்னவனின் மலராடும் வாகைமலர்
போரில் வீரமரணம் அடைந்தவருக்கு புகழ்மாலை
காதலுக்கு தூது போக மல்லிகை
தூதுவனாக போவோரும் அணிவதொரு மாலை
செம்பருத்தி வெட்டைச் சூடை நீக்கும்
செண்பகப்பூ வாத நோய் போக்கும்
ஏகனின் ஆட்சியில் எல்லா மலர்களும்
எழிலார்ந்த வாழ்க்கையில் இடம் பெற்றது
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Saraswathi Rajendran
மனிதர்களின் மங்கல விழாவில் மணம்பெறும்
மரண நேரத்திலும் மலர்களே அஞ்சலியாகும்
உண்மைதான் கவிஞரே.
அருள்பெறும் வாழ்வே அதனூங்கு முண்டு
மருத்துவத் திற்கும் மலர்கள் துணையுண்டு
மகிழம்பூ முகர வாந்தி நிற்கும்
மந்தாரப்பூ உடல் கொதிப்பு நீக்கும்
செம்பருத்தி வெட்டைச் சூடை நீக்கும்
செண்பகப்பூ வாத நோய் போக்கும்
கவிதையில் மருத்துவம் சொன்னமைக்கு
சரஸ்வதியே நன்றி.
தமிழர் பண்பாட்டின் அடையாளம் மலர்கள்
எழிலருள் இன்பங்கள் ஈந்திடும் வீடு
இணைத்து பிணைத்துஇயங்கவும் வைத்த
இணையிலா தொண்று ஈசன்கண் கூடு.
சிறப்பான ஆக்கம்
வாழ்த்துகள் கவிஞரே.
May be an image of ‎2 people and ‎text that says '‎நிலாச்சோறு நிலாச்சோறு முகநூல் குழுமம் முத்து மூன்று வைரம் இநது 12 நாள் 21/08/22 முதல் 25/08/22 வரை வெற்றியாளர் தலைப்பு. மலர பண்பாடு கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன் நடுவர் செல்வா ஆறுமுகம் தினவன் Jubur Jabar தா dا‎'‎‎
Boost this post to reach up to 6 more people if you spend ₹578.
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக