சனி, 11 மார்ச், 2023

கோடிபெறும்

 கோடிபெறும்

அவையில் நிமிர்ந்து வீற்றிருந்த தம்
அவைப் புலவர்களிடம் நவின்றான் மன்னன்
நான்குகோடி பாடல்கள் நாளையே
வேண்டும் அரசன் நவில
அசந்தனர் அறிவுடையோா்
அச்சம் கொண்டனர் முடியுமா வென்று
விடிய விடிய எழுதினாலும் பலராலும்
முடியாதே நான்குகோடி பாடல்கள்
பழிகள் சேருமே எழுதாவிட்டால் நமக்கு
அழிவும் நேருமோ நம் உயிருக்கு
புலம்பித் தவித்தனர் புலவர்கள் அனைவரும்
தவிப்போர் நிலையை உணர்ந்து
தாவிவந்தார் அவ்வையும் ஆங்கு
நிலவரம் கேட்டு புன்னகைத்து பின்
கலவரம் வேண்டாம் நானிருக்கேன்
நான்கே நிமிடத்தில் எழுதிக் கொடுக்க
நான்குகோடி பாடலுக்கு நான்கு வரியா
மந்த அறிவால் புலவா்கள்மதிமயங்கிநிற்க
இந்த பாட்டின்பதவுரை கேளுங்கள்
அவ்வை சொல்ல தெளிந்தாலும் பயந்தனர்
அவ்வையே நேரில் சென்று அவையில்
கோடியென்ற வார்த்தை அடக்கிய
பாடலைப்பாடிப் பதவுரை சொன்னார்
மதியார் வாசல் மிதியாதிருப்பது கோடிபெறும்
உபசரிக்காதவர் வீட்டில் உண்ணாதிருப்பது கோடிபெறும்
நல்ல குடிப்பிறப்பு உடையவர்களிடம்
கூடியிருப்பது கோடிபெறும்
கோடிப்பொன் கொடுத்தாலும் உண்மை
பேசும் தன்மை கோடிபெறும்
சூழ்ச்சி செய்த மன்னன் வீழ்ச்சியடைந்தான்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக