சனி, 11 மார்ச், 2023

பூமணியோ தேர்மணியோ

 பூமணியோ தேர்மணியோ

முல்லை மொக்கு முகிழ்ந்து மணக்குது
எல்லும் சாய எருதுகள் வந்தது
துள்ளித் திரிந்த தலைவியும் ஏக்கத்தில்
அல்லித் தண்டாய் துவண்டவள் எழுந்தாள்
எங்கோ கேட்கும் மணியின் ஓசையே
ஓங்கிய உண்மையை உணர்த்துது தோழி
பணியின் நிமித்தம் சென்றத் தலைவன்
என்னவன் வந்திடும் தேர்மணி ஒலியோ
மாலையில் மேய்ச்சல் முடிந்து திரும்பும்
சாலைவரும் ஆநிரையின் கழுத்துப் பூமணியோ
என்னுயிர்த் தோழி கேளடி சேதி
என்னவர் வரும் பருவம் வந்தது
முல்லைக் கொடி படர்ந்த குன்றேறியே
வல்லத் தலைவன் வருகிறானோ என்னவோ?
நாடினம்மை வருமோசை எதுவென கண்டிடுவோம்
பாங்கியே போய் பார்த்து வருவோம்வா
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.
Boost this post to reach up to 408 more people if you spend ₹578.
All reactions:
Radhakrishnan Gopalakrishnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக