சனி, 11 மார்ச், 2023

மலைபடு கடாம்

 மலைபடு கடாம்

பத்துப் பாட்டினுள் ஒரு முத்துமணிக் கோவை
புத்தம் புதிதாய் புகன்றிடும் ஞானவொளி
பெருங்குன்றூர் ஈன்றெடுத்த பெருங்கவு சிகனாரால்
பாடப்பெற்ற புகழ்பெறும் நூலே மலைபடு கடாம்
இகழ்ந்தோர் தம்மை சிறையில் அடைத்தவன்
புகழ்ந்த புலவோருக்கு நாட்டை ஈந்தவன்
நன்னன் என்ற நல்ல ஈகையாளன்
தனக்கென்று எதையும் தன்னில் கொள்ளான்
பாணரின் பாடலுக்குத் தேர்களை வழங்கிய
நன்னன் நற்செயல்கள் நல்கும் பாங்குடையவன்
பாணர்கள் நன்னனின் புகழைப் பாடி
பயனுறும் பரிசில்கள் அளவிறந் தனவே
காற்றினில் வருமே குயிலின் கீதமும்
ஆற்றிடை நீரும் மயிலின் அகவலும்
ஏற்றியேப் பாடும் பாணர்கள் பாடலும்
சாற்றிடும் நன்னன் சிறப்பை நாளுமே
ஈந்திடும் கொடையால் ஈடில்லா புகழால்
பெற்றனன் நன்னன் பெறற்கரும் பேறே.
மொட்டவிழ் மலரும் மானின் துள்ளலும்
மலையெங்கும் கேட்கும் பறையின் ஒலியும்
வான் அரமகளிர் அருவியாடும் ஒலியும்
கானகத்தில் மரங்கள் இசைத்திடும் களிப்பினொலியும்
மலரும் மலரின் மணமாக வீசும்
மன்னன் என்னும் நன்னனின் புகழே
பிறப்பில் சிறக்குமோர் பேரருள் அடைந்தான்
சிறந்து மாரியாய் மக்களைக் காத்தான்
நாட்டின் இயல்பும் நன்னன் புகழும்
ஏட்டில் எழுதி போற்றியது சிறப்பே
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of text that says 'ာ်မ်ပ်းတ်းဆာ် மலைபடுகடாம் மலை கவிஞர் காவியக் காவியக்களஞ்சியம் களஞ்சியம் வெற்றிசான்றிதழ் வெற்றி சான்றிதழ் சிறப்பு சரசுவதி சரசுவதிராசேந்தி ராசேந்திரன்'
Boost this post to reach up to 408 more people if you spend ₹578.
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக