அருணகிரியார்
திருவெங்கட்டார் முத்தம்மை
இருவரின் இனியமகனார்
இளமையில் கல்விகற்று
தேர்ந்தவர் ஆனாலும்
சிற்றின்பச் சேற்றில்
சிதைந்து சீரழிந்து
சிறுமைப் பட்டுப்போனார்
கட்டிய மனைவியும்
கட்டிலுக்கு மறுத்துரைக்க
தமக்கையும் திட்டிஒதுக்க
வீட்டைவிட்டு வெளியேறினார்
புறம்பான செய்கை
புரையோடிய புண்ணாய்
போனதால் பூவுலகில்
பழிதவிர்த்து வாழ்வதெப்படி
குழப்பத்திலும் கவலையிலும்
கோவிலேறி உயிரை
மாய்த்துக்கொள்ள முனைகையில்
குமரன் கையேந்திக்கொண்டார்
ஆறுவிரல் கொண்டதனால்
ஆறுதலைகளும் சரவணபவஎனும்
ஆறெழுத்து மந்திரத்தை
நினைவு றுத்துகிறதோ
முத்தைத்தரு பத்தித்திரு நகை
முதலடியை எடுத்துக்கொடுக்க
சந்தக் கல்வியால்
சிந்து பாடினார்
திருப்புகழ் கந்தலங்காரம்
கந்தர்அனுபூதி கந்தர்அந்தாதிஎன
பத்துவகை அலங்காரம்
அத்தனையும் தந்தோன்
இறையருள் பெற்று
ஈசன்கண் ஓன்றி
நிறைபொருளாய் ஆனார்
அழியும் உடல்விட்டு
அழியாப் புகழ்பெற்றார்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக