சனி, 11 மார்ச், 2023

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

 தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

கூரிய நுனியுடைய கூர்அரும்பு பூத்திருக்க
கரியபெரிய கொம்புடைய இரலை மான்கள்
பரற்கற்கள் நிறைந்த பள்ளங்களில் துள்ளியாட
மேகங்கள் சீறிவந்து மழைத் துளிகளைச்சிதற
கார்கால மழையில் கானகம் கவின்பெற
பொருள் தேட சென்றவன் தலைவியைக்காண
தேரில் விரைய தலைவனின் மனவேகமறிந்த
பிடரிமயிர் கொண்ட குதிரை விரைந்தது
காட்டு வழிதனில் கடந்திடும் தேரினில்
பூட்டிய மணிகளின் அதிரும் ஓசையை
கேட்டுப் பதறிய பறவைகளின் துன்பம்பார்த்து
வாட்டம் போக்க மணியின் நாக்கைக்கட்டி
பறவைகளுக்கேத் தீங்கு நினைக்காதவன்
பாவைக்கு தீமை செய்வானா
தேவியைப் பார்க்க தலைவன் வந்தான்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.
Boost this post to reach up to 408 more people if you spend ₹578.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக