வெள்ளி, 10 மார்ச், 2023

கூர்ம அவதாரம்

 கூர்ம அவதாரம்

திருமால் எடுத்த அவதாரம் பத்து
உருவில் கூர்ம அவதாரம் இரண்டாவது
இந்திரன் ஐராவதத்தின் மீதேறி ஊர்வலம்
வருவதைப் பார்த்த துர்வாச முனிவர்
பரமன் மாலையை இந்திரனுக்கு ஈய
செருக்கேறிக் கிடந்த இந்திரன் அலட்சியப்படுத்தினான்
மூன்று உலகமும் நீயும் பாழாகட்டும்
முனிவர் இட்டசாபத்தால் மூவுலகமும் இருண்டது
உழல்கின்ற துன்பம் உடனடியாய் நீங்க
இந்திரனும் தேவாதியரும் பிரம்மனிடம் முறையிட
மந்திரமலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகக்கொண்டு
திருப்பாற்கடலை அசுரர்களுடன் சேர்ந்து கடைவாய்
திருமால் தானும் உதவுகிறேன் எனச்சொல்ல
மலையைக் கடைய பாரம் தாங்காது
மூழ்கிய மலையை ஆமை வடிவமெடுத்து
முதுகில் தாங்கி திருமால் காப்பாற்ற
அருந்தவப் பேற்றால் அறிந்தான் இந்திரன்
நலமான யாவும் நயமிகுந் தாகியதை
ஆடி அடங்கியது அகந்தை மனவேரும்
ஆதிமூலவனின் கூர்ம அவதார மூர்த்தியை
அனுதினமும் தியானம் செய்பவருக்கு சகலசம்பத்தும் சம்பவிக்கும்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக