வெள்ளி, 10 மார்ச், 2023

எந்தை நாட்டீரே

 எந்தை நாட்டீரே

எந்தை நாட்டீரே என்ன நடக்கிறதிங்கே
சிந்தியுங்கள் சிறப்பாக இருந்த நாட்டை
சொந்தம் கொண்டாடி சொத்து சேர்த்தீர்
நிந்தனை செய்தும் நீவீர் திருந்தவில்லை
புறம்பாக நின்று வரம்புமீறிய செயல்களால்
அறம் தவறி அராசகம் செய்கிறீர்
சொந்த மதியால் சுயமாக சம்பாதித்தாலும்
அந்த நிலத்தையும் ஆட்டையைப் போடுகிறீர்
அன்பின் சிறப்பால் ஆண்ட சமூகத்தை
வம்பாய் மாற்றி வன்முறைக்கு வித்திட்டீர்
வருந்தி திருந்திடும் வாழ்க்கையே இல்லையின்று
தருமகுணம் அற்ற மிருகமான மனிதரால்
அன்பின் சிறப்பால் அனைத்தும் உறவாகி
பண்பால் நிறைந்த பாரதத்தை நீவீர்
பழுதாக்கி குள்ளத் தனத்தால் குளறுபடியாக்கினீர்
துட்டர்கள் செய்கின்ற சூழ்ச்சிகள் தூரமாகவேண்டும்
நட்டங்கள் வராமல் நலன்களை நாடுபெறவேண்டும்
பட்டங்கள் திறமைக்கே வழங்கப்படல் வேண்டும்
நாட்டை நினைத்து கேட்டைக் களையவேண்டும்
வெட்ட வெளியான நிலங்கள் காக்கப்படவேண்டும்
தீர்த்திட வேண்டும் தீயோர் செயல்களை
திளைத்திட வேண்டும் நல்தொழில் வளம்
பார்த்திட வேண்டும் விவசாயிகள் வாழ்வை
பகைத்திட வேண்டும் பாதகம் செய்வோரை
நாடும் வீடும் வளமை பெறவே
நல்லவர் ஆட்சி நடந்திட வேண்டும்
எந்தை நாட்டை முன்னிலைக்கு கொண்டுவர
சிந்தையில் கொண்டு நல்லறிஞரைத் தேர்ந்தெடுப்போம்
சரஸ்வதிராசேந்திரன்
Keshvadas
SaraswathiRajendran
கவிதையின் தொடக்கத்தில் தூக்கிய சாட்டையை
கடைசிப் பத்திக்கு முந்தையப் பத்தி வரை கீழே வைக்க வில்லை கவிஞர்!
ஆவேசம் ஆக்ரோஷம் தலைக்கேறிய வரிகள் உத்வேகம் தருகின்றன;, கடைசி இருபத்திகளில் கூறிய அறிவுரைப்படி மக்கள் செயல்பட்டால் எந்த நாடும் உருப்படுமே!
கவிதை மிகவும் சிறப்பு!
வாழ்த்துகள்
May be an image of text that says 'வடர்கமிய் கய்பகன் பைந்தமிழ்ப் பூம்புனல் கவிஞனின்குரல்.97 குரல்.97 நிறுவனர் வெற்றிச் சான்றிதழ் கவிஞசர் மீராஸ்ரீ தலைவர் கேசவதாஸ் சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்கிறோம் எந்தை தை நாட்டீரே លរុយនាណត់39.6.30232" குவிஞூர் 16.5.2022- க.பரமசிவன் 31.5.2022'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக