சனி, 31 டிசம்பர், 2016

தமிழமுது கவிச்சாரல்11-12-2016



#தமிழமுது_கவிச்சாரல்_வணக்கம்_பாவலர்களே
(((((((((((((((((((((((((((((((((((((((0))))))))))))))))))))))))))))))))))))
#பாரதியார்_பிறந்த_நாள்_சிறப்புச்__சான்றிதழ்
(((((((((((((((((((((((((((((((((((((((0))))))))))))))))))))))))))))))))))))
உலகப்பெருங்கவி பாரதி
உணர்ச்சியூட்டும் பாக்களாலும்
எழுச்சியூட்டும் கட்டுரையாலும்
கிளர்ச்சியூட்டும் பேச்சாலும்
விடுதலை வேட்கையைதூண்டியவன்
தொட்டுப்பார்க்காத துறையில்லை எமை
விட்டுப்போனாலும் உன்
கவிதைகள் காலம் கடந்தும் நிற்பவை
வீரத்தின் விளை நிலம்
விடுதலை இயக்கத்தின் ஆதாரம்
சிந்திய கவிதைகளால்
செவிகளில் தேன் பாய்ச்சியவன்
சுட்டும் விழிகளால்
சுட்டெரிக்கும் கவிதை தந்தவன்
இயற்கையிலேயே
கவித்துவம் பெற்றதால்அவனொரு
இயற்கைகவி
ஆதிதிராவிடர் ஒருவருக்கு
பூணூல் அணிவித்த
புரட்சிக்கவி
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழிபோல்
இனிதாவன எங்கும் காணோம்
என்று சொன்ன அவன் ஒரு தமிழ்க்கவி
உன்னை பேசாத நாவில்லை
உனை அறியாத மக்கள் இல்லை
வையத்துள் வாழ்வாங்குவாழ்ந்து
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட
உன்னை உன் நினைவு நாளில்
வணங்கி நாளும் வாழ்த்துவோம்
சரஸ்வதி ராசேந்திரன்

செய்ய்ற்கலை சூடிகை 5-12-2016




Uthaya Sakee with Mohamed Sarfan and 2 others.
55 mins
இனிய காலை வணக்கங்கள் கவிஞர்களே....
05.12.2016 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின் "மோதி விளையாடு" எனும் தலைப்பில் சிறப்பாக கவியெழுதி கவிஞர் Saraswathi Rajendran அவர்கள் சூடிகை சான்றிதழ் பெறுகின்றார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளை தேர்வு செய்த நடுவர் தமிழச்சி பிரபாவதி வீரமுத்து அவர்களுக்கு மனம் மலர்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...
************************************************
சூடிகை போட்டியாளர்
மோதி விளையாடு—தலைப்பு
மோதி விளையாடு
அலை அலையாய் வந்து
அலைக்கழிக்கும் வன்மை
நிலைகுலைந்து போக
மோதி விளையாடி
ஊதித்தள்ளிவிடு சோகத்தை
கண்கட்டும் வித்தைபோல்
கெட்டசெயல்களை உன்னுள்ளே
மோதி விளையாடி
மண்மூடிபோகச்செய்
எடுத்தப் பிறவி
இனிதுற வாழ
மிருக குணம் நீக்கி
மனிதமனம் கொள்
முதலில் உனக்கு நீயே
மோதி உன் மனத்தை சுத்தப்படுத்து
அடுத்தே கெடுப்பது
அதைவிட கேடு
தடுத்து நிறுத்து மோதி
நிறை குணம் கொண்டு
நிம்மதி கொள்
அவரவர் தனக்குள்ளே
மோதி விளையாடி
செயலாற்றும் வேகத்தில்
சீர்பெறும் தீய சக்திகள்
ஊர் அடையும் நன்மைகள்
திடமான செறிவுடன்
தெளிவான அறிவுடன்
எல்லோரும் ஒன்றாக
ஏற்றத்தாழ்வு இல்லாமல்
நல்லோராய் வாழ வழி செய்ய
அவரவருடைய கெட்ட குணத்துடன்
மோதி விளையாடி
முன்னேற்றப் பாதைக்கு
முனைவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கம்பன் கவிக்கூடம் 8-12-2016




கவிப் பிரியன் with Saraswathi Rajendran.
11 mins
கம்பன் கவிக்கூடம்
நட்புறவுகளுக்கு வணக்கம்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

எமது கவிக்கூடத்தில்
03 / 12 / 2016 முதல் 08 / 12 / 2016 வரை
நடைபெற்ற புதுக்கவிதை போட்டியின்
முடிவுகள்.
தலைப்பு - கருணைக்கு ஏன் பஞ்சம்
வெற்றிவாகை சூடிக்கொள்கிறார்
<><><><><><><><><><><><><><><><><><>
கவிஞர். சரஸ்வதி ராஜேந்திரன்
<><><><><><><><><><><><><><><><><><>
அவர்களுக்குவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
கருணைக்கு பஞ்சம் ஏன்?
மனிதரெல்லாம் மனம் மாறிவிட்டார்
மனித குல கருணைதான்
மகத்துவச் சேவை என்பதை மறந்து
அடுத்தவன் கஷ்டப்பாட்டால்
ஆனந்தப்படுகிறார்
பெற்றுப்பேணி வளர்த்தோரை
பெற வேண்டியதையெல்லாம்
பெற்றுக்கொண்டு
முதியோர் இல்லம் அனுப்பும்
மூட இளைஞர்களுக்கு ஏன் கருணைபஞ்சம்
நடைபாதையிலே மயக்கமுற்று
கிடக்கும்jமனிதனுக்கு உதவாமல்
சுயபடம் எடுத்து முகப்புத்தகத்தில்போடும்
இளைஞனுக்கு கருணை பஞ்சம்
காசு பணத்திற்குஆசைப்பட்டு
கலப்படம் செய்யும் வியாபாரிகளுக்கு
கூலி பணத்திற்காக கொண்டவனையே
கொலை செய்யும் கொடூரனுக்கு என
புண்ணாக்கும் கருணை பஞ்சம்
புரையோடிப் போனால்
என்னாகும் நாடூ சிந்திப்பீர்
தொலைந்து போன கருணையை
வலிந்து தேடுங்கள்
கல் நெஞ்சை மென்மையாக்குங்கள்
நல் நெஞ்சோடு வளருங்கள்


தமிழமுது கவிச்சாரல்2-12=2016

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 2-12--16 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_தொடுவானம்_தொடும்_நேரம்
.
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிஞர் ___கவிச்சிற்பி_மு_சாத்தப்பன்_நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
தொடுவானம் தொடும் நேரம்
தூர தூர விலகி ஓடும்
தொட்டுவிடத் துடிக்கும் நேரம் அது
விட்டு நம்மை தொலைந்தே போகும்
சிரத்தையுடன் குழந்தைகள் கடலருகே
சலிக்காமல் கட்டும் வீட்டை
கடல் நீர் விரைந்து வந்து
கலைத்து விட்டு செல்வது போல
தொடுவானம் தொலைந்து போகும்
உதயமாகும் போதே வாழ்க்கையில்
உச்சிக்குப் போக தடுக்கும் தன் இயலாமை விலங்கை
தகர்த் தெறிந்தால் தானே
உயரக் கிளம்ப முடியும் நம்மால்
முடியாதென்பது இயலாமையின் அலட்டல்
முடியுமென்பது முயற்சியின் வலிமை
முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி
முட்டி முட்டி மோதித்தான் பட்டுப்புழு வெளிவரும்
தோல்வி கண்டு சோர்ந்திடாமல் நாமும்
தொய்வில்லாமல் தொடரும் முயற்சியால்
தொடுவானம் தொடுகின்ற நேரம்
தொட்டு விட்டால் கூடும் பேரானந்தம்
சரஸ்வதிராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தின

செய்யுற்கலை சூடிகை 26=12-2016


கவிஞர் ஏ.எச்.என் நௌசாத் with Saraswathi Rajendran.
13 hrs
இனிய காலை வணக்கங்கள் கவிஞர்களே....
26.12.2016 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின் "#தினக்குறிப்பிலிருந்து" எனும் தலைப்பில் சிறப்பாக கவியெழுதி
#கவிஞர்_சரஸ்வதிராசேந்தி
அவர்கள் #சூடிகை_சான்றிதழ் பெறுகிறார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளை தேர்வு செய்த நடுவர் கவிதாயினி #வபீரா_வபீ அவர்களுக்கு மனம் மலர்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...
தினக்குறிப்பை புரட்டுவதே
தித்திப்பான செயல் எனக்கு
அன்றொரு நாள் எனக்குள்
அரும்பிய மொட்டான காதல்
அழகிய பூக்களாக மலர்ந்து
அது தந்த மணம்தான் என்
அன்றைய இனிய இல்லறம்
தூயதோர் காதல்துயரமின்றி அதே
தூய்மையுடன் மூன்றாண்டாய்
தொடரும் அழகு கண்டு யார் கண்
தீண்டியதோ கேடுமன எண்ணங்கள்
தீண்டியது விஷப் பாம்பாய்
தொடர்ந்தது துன்பங்கள்வாழ்க்கையில்
படரும் விஷமாய் படர்ந்து அழித்தது
அர்த்தமுள்ள வாழ்வு அர்த்த மற்றுப் போனது
உதறிய ஆசைகள் வீண் பழியுடன்
சிதறி சின்னா பின்னமாகியது,,
தினக்குறிப்பிலிருந்து அந்த நாட்களை
தூக்கியெறிய முடியாமல் புரட்டி புரட்டி பார்க்கிறேன்
என்னை எடுத்து தன்னைக்கொடுத்த
போனவன் வருவானா என்று!

சரஸ்வதிராசேந்திரன்









27-12--206 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா





அன்பு கவிஞர்களே 27.12.2016ல் நடந்த பட கவிதைப் போட்டி வெற்றி கவிஞர் சான்றிதழ் பெற்றவர்களை வாழ்த்துகிறேன்.
நாளைய 27--12--16 நாளாம் படப்போட்டி
சித்திரை போலச்
சிறந்தொளிர்கின்ற
பத்தரை மாற்று
முத்திரை தங்கமே !
சேயுள முணராச் சிறுமையேன் தீய
பேயுளங்கொண்ட
பேதை நான்
வேலொடு நின்ற வேட்டுவன் போன்று
சூல் கொண்ட கருவை
சிதைத்தேன் அதன் விளைவோ இன்று உன்னுடன்
கூடி விளையாட உனக்கு
கூடப் பிறந்தவள் இல்லாததால்
தனியே தன்னந்தனியே
பிஞ்சு கரங்களால் குஞ்சுப் பறவை இறகுகளை அள்ளி நீ

பறக்க விடுகையில் என் மனம்
குறுகுறுக்கிறது குற்ற உணர்ச்சியால்
சரஸ்வதிராசேந்திரன் !






செந்தமிச்சாரல் 26-11-016





இனிய மாலைவணக்கம் சாரலின் உறவுகளே.
நடைபெற்ற தெம்மாங்கு தென்றலின்
கிழக்குசிவக்கையிலே எனும் தலைப்பில்
இரண்டாமிடம் பெற்ற
சரஸ்வதி ராஜேந்திரன்
அவர்களுக்கும்
கவிஞர் ஏ.எச்.என் நௌசாத்அவர்களுக்கும்
சாரலின் நல்வாழ்த்துகள்.
இதன் சான்றிதழ் வீட்டிற்கு இந்த வாரம்அனுப்பிவைக்கப்படும். வெற்றியாளர்கள்என் உள்பெட்டியிலோ இப்பதிவிலாே தங்கள் முகவரியை மொபைல் நம்பருடன் பதிவிடுங்கள்.
கிழக்கு சிவக்கையிலே
கிழக்காலே கெளளி சொல்லிடிச்சு
உழக்கான நீதான் என் பொஞ்சாதின்னு
வழக்கு செய்யாம வாடிப்புள்ளே
எட்டுப்பட்டி ராசா நீ
கட்டுப்பாடு கொள் லேசா என்னை
கட்டுனபின்னாலதான் நான் உனக்கு ரோசா
வயலோரம் வாடிப்புள்ள
நயமாக நீயும்
வயசானா வராது அதில்
வளமான ரசமிருக்காது
தாய் தந்த பாசம் மாமா அது
தமிழ் நாட்டு ரோசம்
தரம் கெட்டு போகாத
உரமான பொண்ணு நான்
பரிசத்தை போட்டுட்டு
பரிகாரம் தேடு நீ
அரிதாரம் இல்லாத
அவதாரப்பொண்ணு நீ
பரிசம் போட்டுட்டு நான்
தரிசனம் பார்க்கிறேன் உன்
கரிசனம் கண்டு நான் வியக்கிறேன்