சனி, 29 செப்டம்பர், 2018

கவித் தோழமைகள் அனைவருக்கும் தமிழ் சேவையின் வணக்கம்.
14.05.2018 அன்று நடைபெற்ற குறுங்கவிதை போட்டியான " #நிலாத்தூரிகையில் "

#அகத்தின்_அழகு_முகத்தில்_தெரியும் எனும் பழமொழி தலைப்பில்
🌾🌸
கவியெழுதிய அனைவருக்கும் வாழ்த்துகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அறிந்த வருக்கே உண்மை புரியும்
உணர்ந்தவரே கவனம் கொள்வார்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
உறவுகள் கோடானு கோடிஉள்ள உலகில்
உண்மை புறப்பாட்டில் கள்ளமில்லா
உள்ளத்தெளிவும் கருணைக் கண்களும்
கண்ணில் தெரிவதுபோல் உள்ளம்தெரியவிடும்
திறந்த வெளிபோல் நிறைந்த உள்ளமும்
பிறந்த குழந்தையின் அகமும் அழகு புறமும் அழகு
அறிவின் வளர்ச்சியுடன் ஆசையும் சேர்ந்து
அகம் முகம் மறைத்தேயுலகு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக