சனி, 29 செப்டம்பர், 2018

சங்கச்த்தமிழ் கவிதைப்பூங்கா--12-10-2017

காதல் சான்றிதழ்போட்டி---- 22
கண்ணன் வரும் நேரமிது
கண்ணன் வரும் நேரமிது
கண்ணு ரெண்டும் மூடாம
காத்திருக்கேன் ராதை நான்
கண்ணா காவல் கொள்ளவா
கண்ணா உன் பார்வையிலே
என் மனம் பாகாய் உருகுதடா
பார்க்கும் இடம் தோறும் உன்
புன்னகை உருவமே தெரியுதடா
அடி பணிவேன் உன் காலடியில்
அகம் மலர்ந்து வந்திடுவாய் நீயே
ஆசை கொணடேன் உன்னிடம்
வசையில்லா வாழ்வுதர வா
உன் னால் என் தூக்கம் போச்சு
உடலெங்கும் பொங்கும் கடலாச்சு
அலைகளைப்போல் விழியிரண்டும்
அலையுதடா ஒளிவு மறைவு இல்லை
பாரி மன்னன் தேர்கொடுக்க வருவான் இந்த
பாவை தனை அள்ளிச்சூடிஅகம் மகிழ என்
கண்ணன் வரும் நேரமிது வழி விடுங்கள்
என் கனவு நாயகனை வரவேற்க வாருங்கள்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக