சனி, 29 செப்டம்பர், 2018

உடைத் தெறிந்து வா மனமே
தடைகளை எல்லாம் தயங்காமல்
உடைத் தெறிந்து வா மனமே
அடிமை வாழ்வின் அவலம் போதும்
அஞ்சிடும் போக்கை அறுத்தெறி
வட்டமிடும் சூரியனைப் போல்
தொட்டதெல்லாம் எட்டிவிடு
எக்காலம் உன் பக்கம் எல்லாம் என
முக்காலச் சங்கே முழங்கு
திருட்டுக் குணமும் புரட்டு செயலும் செய்பவரை
விரட்டி வாழ்க்கையில் முன்னேறு
கொடுமை செய்யும் கொடூரனை
கொஞ்சமும் இரக்கம் காட்டாமல்
உடைத்தெறிந்து வா மனமே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக