சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--31-7-2018

என் விடியலின் முகவரி நீ
என்னுயிரை உனக்குத்
தாரை வார்த்தப் பின்னாலே
என்னுடலை போக்கி வேறு
உலகம் போவேனோ சொல்லு
கடலில் கலந்த நதி
மீண்டு வருமோ சொல்
கன்னி உனை சேர்ந்த
நான் எவ்விடம் செல்வேன்
என் விடியலின் முகவரி நீ
என் வீட்டின் முகவரியும் நீதான்
உச்சமாய் உள்ளதெல்லாம்
கொச்சைப்படாதது உணர்
உன்னை நினைத்தே நான்
என்றென்றும் வாழ்கிறேன்
அன்பால் நிகழும்அனைத்துமே
வென்றிடும் நின்று வாழும்
அன்பே உந்தன் சஞ்சாரமே
என்றும் எந்தன் நெஞ்சோரமே
நீயின்றி நானில்லை ஒருபோதும்
உன் நினைவின்றி வாழ்வேதுஎப்போதும்
என் விடியலே வந்து விடு
முடிவாய் பதிலைச் சொல்லிவிடு
கூடாமல் போகாது என்னுயிரும்
வாடாமல் உனை காப்பேன் என்றும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக