சனி, 29 செப்டம்பர், 2018

சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா 25-10-2018

தூது சொல்லாயோ மாமனிடம்
தூங்காத கண்கள் இரண்டு இங்கே சிவந்து கிடக்குது
தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குது மாமன் நினைப்பு
தூது சொல்லாயோ மாமனிடம்
மாது இவள் துயரத்தை சொல்லு வெல்லக்கட்டியே
மாலை ஏற ஏற எதோ தோணுது
மனசு கிடந்து அடிச்சுக்குது
மாமனை விட வணங்க இங்கு
மறு தெய்வம் இல்லேன்னு சொல்லு
மேக்காத்து அடிக்கையிலும் எனக்கு
வேர்த்துக் கொட்டும் விந்தையையும் சொல்லு
வாசமல்லி தலையில் வச்சாலும் என்
வாட்டம் பட்டு வதங்கி போகுது
நேசம் கொண்ட மாமன் இல்லாம
காய்ச்சின பாலுகூட கசக்குது
நெஞ்சக்கூட்டுக்குள்ளே பொத்திவச்சேன்
பஞ்சு பொதியைப்போல மாமன் நினைப்பை
மஞ்சத்தாலி கொண்டு வரச்சொல்லு
மாமன்மேல ஆசை வச்ச பொண்ணு
மனசு புரியலையா குணமே மாறிடுச்சா
இனிமேலும் தாங்காது என் மேல்
தனி பாசம் வச்சிருக்கிற ஆட்டுக்குட்டியே
தாமதிக்காம போய் வரச்சொல்லு
தரையிலே போட்ட மீனா நான் துடிக்கிறதை
வஞ்சி மகள் வேதனையில் தவிச்சிகிடக்கேன்
வந்தணைக்க விர்சா வரச்சொல்லு ஆட்டுக்குட்டியே
 சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக