சனி, 29 செப்டம்பர், 2018

னிலாச்சோறு ---1-6-18

பூஞ்சோலை பகுதி –3 நிலாச்சோறுகுழுமம்
முகவரி தேடும் முழுமதி
உன்னை முதன் முதலில் நான் பார்த்ததுமே
என் மனதிற்குள் உறவுகள் துளிர் விட்டது
நிலவினை உரசிட நினைவுகள் பறந்தது
காணும் கனவுக்கு சிறகுகள் முளைத்தது
கண்ணாளனே நீகாப்பாய் என நம்பி வாழ்கிறேன்
உன் கடைக்கண் காட்டி காதலைச் சொல்லிவிடு
பல நாளாய் தவம் கிடக்கிறேன் உன் பார்வைக்கு
பார்த்துக்கிடக்கும் என் கண்கள்பூத்துப் போவதுவோ
அனாதையான என் வாழ்வில் சத்தும் இல்லை
மனதில் சாரமுமில்லை சந்தோஷமும் இல்லை
தினம் தோறும் கவலையோ கொஞ்சமில்லை
கணமும் தாமதிக்காமல் வராவிட்டால்பசியாரேன்
என் உலகமே உன் கண் வீச்சில்தான் இருக்கிறது
உன் வில் போன்ற புருவத்தால் அன்பை எய்து
முழுமதி நிலவாய் வந்து என் வாழ்விற்கு ஒரு
முகவரி தந்து முழுமையாய் என்னை ஆண்டிடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக