சனி, 29 செப்டம்பர், 2018

சிந்தனை சிற்பிகள்---11-6-18

ஆதிக்கம் செலுத்தும் ஆசைகள்
ஆசைகள் ஆயிரம் மனிதருக்கு
நிறைவேறாத ஆசையென்றால்
மனம் நிம்மதி இழக்கும்
நிறைவேறினாலோ அது
இன்னொன்றை நினைக்கும்
கடல் அலை ஓய்ந்தாலும்
மன அலைகள் ஓயாது
தலை நிமிர்ந்து வாழஆசை
நிலை குலையாது வாழ ஆசை
வஞ்சகஎண்ணம் வளராதிருக்க ஆசை
நெஞ்சினில் பழி உணர்வுஇல்லாதிருக்க ஆசை
நல்ல நட்பு கொண்டிட ஆசை
நானிலத்தில் அமைதி நிலவ ஆசை
மரங்கள் வளர்க்க ஆசை
உரங்கள் இல்லாத காய்கறிஇட ஆசை
மடை திறந்த வெள்ளம்போல்
விடை கூறி வரஆசை காவிரி
பெண்கள் மதிக்கப்படஆசை
வன் கொடுமை தீர்க்க ஆசை
மதுக்கடை மூட ஆசை
மக்கள் வறுமையின்றிவாழ ஆசை
அத்தனையும்
அமைதியாய் நடந்திடல் வேண்டும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக