சனி, 29 செப்டம்பர், 2018

புதியதொருவாழ்க்கை--ஜூலை 26

முதிர் கன்னி
குறைகள் வைத்துபடைக்கவில்லை
குருடாய் செவிடாய் ஊமையாய்
கால் ஊனமாய் மனப் பிறழலாய்
கடுகளவும் குறைவில்லாமல்
அருமையாய்த்தான் படைத்துள்ளான்
பார்ப்பவர்கள் கண்கள் பழுதா
படைத்தவனின் படைப்பு பழுதா
பருவம் வந்தும் பலனில்லை
உருவத்திலும் குறைகள் இல்லை
மணமேடைக்குத் தயாரானாலும்
மங்கலமில்லை மணமும் இல்லை
மலர்கள் எல்லாமே சுவாமிக்கு உகந்ததல்ல
மலரில்லாத மணமாய் மணமில்லா பெண்ணாய்
உதிர்ந்த மலராய் உதவா பெண்ணாய்
முதிர்கன்னியாய் உணர்ச்சியற்று நிற்கிறேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக