சனி, 29 செப்டம்பர், 2018

புதியதொரு வாழ்க்கை--30 -5=2018

பாவலனே வா
தென்றலைத் தூதுவிட்டு
தலைவா காத்திருக்கிறேன்
கண்களைத் திறந்து உன் 
வரவுக்காக பாத்திருக்கிறேன்
கண்ணிரண்டும் அலைபாய
காலிரண்டும் தடுமாற
மோதும் எண்ணங்கள் நூறு
மோகத்தினால் இன்று
நெஞ்சில் ஒரு தும்பி பறக்க
செல்லக்கிளி சிந்து படிக்கிறேன்
பெண்ணழகு பூச்சூடி நிற்கிறேன்
மன்னவனின் சீர் பாடி
தென்னை இளம் தோப்புக்குள்ளே
தேன் கொடுத்த சோலைகளே
மன்னவனே நீ வாய் திறந்தால்
மனமெல்லாம் வாசம் பெறும்
உன்னை நினைத்துஉருகும்
பனிமலரைத்தேடி வா பாவலனே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக