சபரி மலையிலேமணிகண்டன் சந்நிதானம்
பந்தள வேந்தரின் புண்ணிய செல்வன்
பம்பையின் பாலகன் பால்முக வடிவினன்
கண்ணனுக்கும் சிவனுக்கும் பாலகனாய்
கருணை வடிவமாக வந்துதித்தவன்
பம்பையின் பாலகன் பால்முக வடிவினன்
கண்ணனுக்கும் சிவனுக்கும் பாலகனாய்
கருணை வடிவமாக வந்துதித்தவன்
பம்பையிலே தலைமுழுகி பாவங்கள் அதில் கழுவி
பதினெட்டுப் படியேறி பக்கத்துக்கொரு காய் உடைத்து
பந்தள ராசனை மணி கண்ட யோகியை வணங்கி
பக்தியுடன் வேண்டினால் முக்தியும் கிடைத்திடும்
பதினெட்டுப் படியேறி பக்கத்துக்கொரு காய் உடைத்து
பந்தள ராசனை மணி கண்ட யோகியை வணங்கி
பக்தியுடன் வேண்டினால் முக்தியும் கிடைத்திடும்
வில்லாளி வீரன் வில்லெடுத்துத் தனைத்தடுத்த
வில்லி மகிசியை வதம் செய்த கலியுகவரதன்
சங்கடங்கள் தீர்த்திடும் சபரிமலை எருமேலியவன்
சரணாகதி அடைந்தோருக்கு காட்சி தருபவன்
வில்லி மகிசியை வதம் செய்த கலியுகவரதன்
சங்கடங்கள் தீர்த்திடும் சபரிமலை எருமேலியவன்
சரணாகதி அடைந்தோருக்கு காட்சி தருபவன்
அய்யனின் நீலிமலை அமர்ந்திருப்பான்
புலிமேலே
அய்யனவன் சாஸ்தாவை அடி பணிவோம் நாளும்
வன்புலிமேல் அமர்ந்தவன் வாவர் சுவாமி தோழனவன்
இன்னல்கள் தீர்த்துவைப்பான் இனபேதமில்லாமல்
புலிமேலே
அய்யனவன் சாஸ்தாவை அடி பணிவோம் நாளும்
வன்புலிமேல் அமர்ந்தவன் வாவர் சுவாமி தோழனவன்
இன்னல்கள் தீர்த்துவைப்பான் இனபேதமில்லாமல்
பொய்யுலகு விட்டு மெய்யுலகு சேர்ந்திட
நெய் அபிடேகம் செய்து அய்யன் பாதம் தொழுவோம்
நெய் அபிடேகம் செய்து அய்யன் பாதம் தொழுவோம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக