சனி, 29 செப்டம்பர், 2018

இலக்கியப்பூந்தோட்டம்

கவி உறவுகள்' அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "சரித்திரமாகும் சம்பவங்கள்" போட்டிக் கவிதையின் வெற்றிச் சான்றிதழ்கள் இதோ உங்கள் பார்வைக்கு!.
பங்களித்து சிறப்பித்த அனைத்து கவியுறவுகளுக்கும் இனிய வாழ்த்துகள்!..
இவண்
"சிந்தனைச் சிற்பிகள்" நட்புக்குழு!
சரித்திரமாகும் சம்பவங்கள்
சம்பவங்களே சரித்திரமாகுது
சரித்திரமே சம்பவங்களாகுது
புயலென வெள்ளமாய் எழுந்தது
பூமியைத் தாக்கியது புவியின் ஆத்திரம்
பொடிபட அதிர வைத்தது மக்களை
இறைவன் எழுதிய சாத்திரம்
இழப்பைத் தந்தாலும் பாலகுமாரின்
இரும்புக்குதிரையும் உடையார் நாவலும்
நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லே
என்ற எண்ணங்களை எழுத்துக்களாக்கிய
பாலகுமாரனின் எழுத்துக்களும் சரித்திரம்தான்
அறம் கொன்ற புவி என்றும் சாக்காடுதான்
அனல் வந்து சூழ்ந்தது தீக்காடுதான்
நச்சுப்புகை வேண்டாமெனசொன்னதால்
துச்சமாய் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது
முத்து நகர் மக்களை ரத்தத்தில்தோய்த்தது
மழலைக்கும் பிஞ்சிற்கும்தோட்டாவை
பரிசளித்த முள்ளி வாய்க்கால் இனபடுகொலையும்
யாழ்ப்பான நூலகம் எரிந்ததும் சரித்திரம்தான்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக