சனி, 29 செப்டம்பர், 2018

கவியுலகபூஞ்சோலை--20-7=18

சூடாத பூவொன்று
சூடாத பூவொன்று செடியினிலே பூத்து நின்று
வாசமில்லா மலராய் வாடா மலராய்
கண்ணுக்கு விருந்தாய் பூத்து நிற்கிறது 
இறைவன் படைப்புப் பிழையோ
தேடி வருவோருமில்லை
சூடிக்கொள்வோரும் இல்லை
பூத்து பூத்து சிரித்து
சிதறி உதறிவிடுகிறது துன்பத்தை
வீடிருந்தும்விளக்கிருந்தும்
வெளிச்சம்இல்லை
பொட்டிருந்தும்பூவிருந்தும்
புன்னகைஇல்லை
பூவின்வேதனையைத்தீர்த்து
வைக்கயாருமில்லை
வாசமுள்ள பூவைப் பார்க்கும்போது லேசாய்
வருத்தம் வரத்தான் செய்கிறது அதற்கும்.
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக