சனி, 29 செப்டம்பர், 2018

கவிதைமணி---25-6-18

Saraswathi Rajendran தினமணி கவிதை மணி
1 min •
முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணி 25-6-2018
ஒருமுறையேனும்: சரஸ்வதி ராசேந்திரன்
நாட்டின்
நிலவரம்
நாளும் கலவரம்
அம் மென்றால்
ஆர்ப்பாட்டம்
உம் மென்றாலே
போராட்டம்
சோறுபோடும்
உழவர் கூட்டம்
கூறு போடபிரிந்து
விவசாயமும்
செத்ததிங்கே
தீவிர வாதமும்
பாலியல்கொடுமையும்
தினமும் நடக்கிறது
குடும்ப உறவுகளோ
குடை சாய்ந்துகிடக்கிறது
நாடு நலம் பெற
நலத்திட்டங்கள்
விரிவடைய
நயத்தை இழந்து
சுயத்தையும் இழந்து
தவிக்கும் மக்கள் நலமடைய
துயரம் போக
நல்லாட்சி அமைந்திட
வல்லரசாய் இந்தியா
நல்லரசாக நானிலத்தில்
ஒரு முறையேனும்
வருவாரா காமராசர்போல்
ஒருவர்,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக