சனி, 29 செப்டம்பர், 2018

சிந்தனைச்சிற்பிகள்

கவி உறவுகள்' அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "உறைபனி.. மணித்துளிகள்!" போட்டிக் கவிதையின் வெற்றிச் சான்றிதழ்கள் இதோ உங்கள் பார்வைக்கு!.
தலைப்பு--
உறைபனி மணித்துளிகள்
அன்பே நீ தூவிய காதல் பூக்களால்
என்மன அலைகள் ஆர்ப்பரிக்கிறது
சூது வாது தெரியாது இருந்த மனது
சுற்றமும் நட்பும் சுமையென நினைக்கிறது
உன் உரைகள் கேட்ட செவி மற்றவர்கள் பேச்சை
வீண் உரைகள் என அலட்சியம் செய்கிறது
ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடுவதுபோல்
அடியே உன் மனக்கதவை அடைத்துவிட்டாய்
உறை பனிக்கு அடியில்கிடந்து கனவு காணும்
நிறை விதைகளைப்போல் என் நெஞ்சம்
வசந்தத்தைப் பற்றிக்கனவு காண்கிறது நீ
வருவாய் என்ற நம்பிக்கையில் ஆனால்
மணித்துளிகள் நகருகிறதே தவிர நீ வரவில்லை உறை
பனிக்குள்ளேயே உறைந்து போகுமோ என் வாழ்வு
ராணுவ வீர்ர்கள் போல்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக