சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை--2-8-18

உன்னையறிவதே வெற்றி
உன்னுள்: இருக்கும் எண்ணம்தான்
உன்னை உயர்த்தும் உண்மையே
மேயும் மனத்தை அடக்கியே
மெய்யாய் நடந்து வாழ்ந்தால்
நல்ல செய்கை ஆகும்
நானிலம்தான் மதிக்கும்
தான் என்ற அகந்தையில்
தன்னடக்கம் விட்டு நடந்தால்
தறிகெட்டுப் போவாய்உணர்
உன்னுள் இருக்கும் உணர்விலே
உன்னை உரைத்துப் பாரடா
உன்னுள் இருக்கும் அறிவைத் தேர்ந்து
உன்னையறிவதே நாளும் வெற்றி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக