சனி, 29 செப்டம்பர், 2018

புதியதொரு வாழ்க்கை--1-8-18

படக்கவிதை
நேர்வழிப் பாதை நெடுகிலும் பனைமரங்கள்
நிற்கும் இடங்களைச் சொர்க்கமாய்ச் செய்யுது
மண்ணின் மகத்துவம் மிக்கத் தவத்துவம்
என்றென்றும் அழகு இணைந்த அனுபவம் இன்றோ
வெறிச்சோடி காணுகின்ற வெட்டவெளி பாதை
வெட்டி வீழ்த்திய மரங்களால் மாசுற்றுப்போனது
அசோகர் நட்டார் அன்று சாலையோர மரங்கள்
அல்லன செய்யவே ஆட்சி உள்ளது இன்று
அடர்ந்தந்த மரங்கள் அமைந்தந்த பாதை
அமைதி பயணம் கொடுத்தது அனைவருக்கும்
நலங்கூட்ட மக்களுக்குக்கீந்த கொடையேஇயற்கை
நாள்தோறும் அதை தேய்ந்து போகாமல் காத்திடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக