சனி, 29 செப்டம்பர், 2018

13-6-18 தமிழ்ச்சேவை

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
காசுள்ள போதே தேற்றிக்கொள்
நாற்றுள்ள போதே நட்டுக்கொள்
ஏற்றமுள்ளபோதே நீர் இறைத்துக்கொள்
வாய்ப்பிருக்கும் போதே பயன் படுத்திக்கொள்
வளமாயிருக்கும் போதே மற்றவருக்கு உதவிடு
ஆசிரியரிடம் ஆற்றலை வளர்த்துக்கொள்
ஆய கலைகள் அத்தனையும் கற்றுக்கொள்
நோயற்று வாழ்ந்திட உடல் நலம் பேணிடு
நிறைவுற்று வாழ ஒழுக்கத்தை கடைபிடி
மாற்றுத் திட்டம் மனதில் கொண்டிடு
ஊற்று நீரில் விவசாயம் செய்யப்பழகிடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக