சனி, 29 செப்டம்பர், 2018

கம்பன்கவிக்கூடம்--19-6-18

சொல்லிவிட்டு செல்
கண்ணே மணியே கற்பகமே வருவாயோ
என் கண்ணுக்குள் உன் சொப்பனமே
உன்னை நினைத்தாலே சுகம் தானடி
என் நெஞ்சில் எந்நேரமும்
உன் முகம் தானடி
பார்த்துக் கொண்டோம் கண்களால்
பழகியும் விட்டது நெஞ்சம் ரகசியமாய்
விழிக் கயிற்றால் காதலை வீசிவிட்டாய் மனக்
குழிக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறேன் பம்பரமாய்
குறு குறுப்புடன் கால நேரமில்லாமல்
கண்ணே உன் மேனி பால் வண்ணம்
உன் கன்னங்கள் தேன் கிண்ணங்கள்
கண்ணாலே மடக்கி விட்டு
காதலை சொல்லாது விட்டு
காதலனைதவிக்கவிடல் நியாயமா
கன்னி வெண்ணிலா வாய் திறந்து
என்னிடம் சொல்லிவிட்டு செல்
உன்காதலை மேகம் போல்
நீந்தி கரை சேருவேன் பெண்ணே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக